லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில், ஏர் கனடா விமானம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்குள்ள அனைத்து தரைவழி வாகனங்களிலும் ‘டிரான்ஸ்பாண்டர்’ (Transponder) எனப்படும் கண்காணிப்பு கருவிகளைப் பொருத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மொன்றியல் நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ஏர் கனடா விமானம் ஒன்று, கடும் பனிமூட்டம் காரணமாக ஓடுபாதையில் நின்றிருந்த பராமரிப்பு வாகனம் (Maintenance Truck) மீது மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தைச் செலுத்திய ஊழியரும் விமானத்தின் விமானிகளும் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இனி விமான நிலைய ஓடுபாதைகளில் இயங்கும் சுமார் 400 வாகனங்களிலும் ஜிபிஎஸ் (GPS) தொழில்நுட்பத்துடன் கூடிய கண்காணிப்பு கருவிகளைப் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகள் பொருத்தப்படுவதன் மூலம், ஓடுபாதையில் எந்தெந்த வாகனங்கள் எங்கே இருக்கின்றன என்பதை விமானக் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகளும், விமானிகளும் தங்களது கணினித் திரையில் துல்லியமாகப் பார்க்க முடியும்.
இதுவரை வானொலித் தொடர்பு மற்றும் நேரடிப் பார்வை மூலமே வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன.
ஆனால், பனிமூட்டம் அல்லது மழைக்காலங்களில் இது சாத்தியமில்லாததால், புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் விபத்துகளைத் தவிர்க்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
