இந்த வார இறுதியில் மொன்றியலின் முக்கிய போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றான நெடுஞ்சாலை 520-இன் மேற்குப் பகுதி கட்டுமானப் பணிகளுக்காக முழுமையாக மூடப்படவுள்ளது.
இதனால் விமான நிலையம் செல்பவர்கள் மற்றும் மேற்குத் தீவு (West Island) பகுதி மக்கள் பெரும் போக்குவரத்து நெரிசலைச் சந்திக்க நேரிடும்.
நெடுஞ்சாலை 520-இன் ஒரு பகுதியானது, இன்று இரவு 9:30 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5:00 மணி வரை, மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளியேறும் வழி 4 (Exit 4 – Montée de Liesse) முதல் நெடுஞ்சாலை 13 தெற்கு நோக்கிய நுழைவுப் பாதை வரை வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் செல்பவர்கள் வழமையை விடக் கூடுதல் நேரத்தை ஒதுக்கித் திட்டமிடுமாறு போக்குவரத்து அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


