அமெரிக்காவுடனான வர்த்தக உறவுகளைச் சீரமைக்கவும், அதிகரித்து வரும் வர்த்தகத் தடைகளை எதிர்கொள்ளவும் புதிய ‘கனடா – அமெரிக்க வர்த்தக ஆலோசனைக் குழு’ நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவை பிரதமர் மார்க் கார்னி இன்று உத்தியோகபூர்வமாக நியமித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவினால் அமைக்கப்பட்ட பழைய குழுவிற்குப் பதிலாக, புதிய நிபுணர்களைக் கொண்டதாக, இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவை கனடாவின் முக்கிய அதிகாரி மைக்கேல் சபியா மற்றும் அமெரிக்காவுக்கான தலைமை வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர் ஜானிஸ் சாரெட் ஆகியோர் வழிநடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெரிக்காவின் கடுமையான வரி விதிப்புகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு (Protectionism) எதிராகக் கனடா எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இக்குழு அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும்.
அமெரிக்காவை மட்டுமே நம்பியிருக்காமல், ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்தைப் பெருக்குவதற்கான ‘கனடா ஸ்ட்ராங்’ என்ற வியூகத்தின் ஒரு பகுதியாகவே, இந்த ஆலோசனைக் குழு பார்க்கப்படுகிறது.
