மொன்றியலின் சென்-லியொனார்ட்-வெஸ்ட் (Saint-Léonard-Ouest) தொகுதி நகர சபை உறுப்பினர் மௌரோ பரோன் (Mauro Barone) தமது பதவியிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவரது அரசியல் கட்சியான ‘எக்விப் சென்-லியொனார்ட்’ (Équipe Saint-Léonard), கியூபெக் மாகாண சட்டப்படி சமர்ப்பிக்க வேண்டிய வருடாந்த நிதி அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பிக்கத் தவறியதே இந்த அதிரடி நடவடிக்கைக்குக் காரணமாகும்.
கியூபெக் மாகாண தேர்தல் சட்டத்தின்படி, அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது 2025-ஆம் ஆண்டிற்கான நிதி அறிக்கையை ஏப்ரல் 1-ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
ரோனின் கட்சிக்கு வழங்கப்பட்ட 10 நாட்கள் கூடுதல் கால அவகாசமும் கடந்த நிலையிலும், வருடாந்த நிதி அறிக்கை சமர்ப்பிக்கப்படாததால் இந்தத் தடை அமுலுக்கு வந்துள்ளது.
இந்தத் தடையின் காரணமாக மௌரோ பரோன் கலந்துகொள்ள முடியாத ஒவ்வொரு நகர சபை அமர்வுக்கும், அவரது ஆண்டுச் சம்பளத்தில் 1 சதவீதத் தொகை அபராதமாகக் கழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்கம் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள மௌரோ பரோன், கட்சியின் தலைமை மற்றும் நிதி முகவர்களின் தாமதமே இதற்குப் பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ளார்.
