கியூபெக் மாகாணத்தின் ஆளும் கட்சியான -வின் புதிய தலைவராக கிறிஸ்டின் ஃப்ரெச்செட் (Christine Fréchette) தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உள்ள தீவிர தேசியவாத ஆதரவாளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க எதிர்க்கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக, தேசியவாதக் கொள்கைகளில் பிடிப்புள்ள பெர்னார்ட் ட்ரெய்ன்வில் (Bernard Drainville) தோல்வியடைந்ததால், அவரது ஆதரவாளர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளதாகக் கருதப்படுகிறது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கியூபெக்கின் முக்கிய எதிர்க்கட்சிகள் சில அரசியல் நகர்வுகளை மேற்கொண்டுள்ளன.
“தேசியவாதிகளே, உங்கள் சொந்த வீட்டிற்குத் திரும்புங்கள்” என்ற வாசகத்துடன் பாா்ட்டி கியூபெக்வா கட்சி விளம்பரங்களைத் தொடங்கியுள்ளது.
அக்கட்சியின் தலைவர் பால் செயின்ட்-பியர் பிளாமோண்டன், “CAQ கட்சியில் தேசியவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது, உண்மையான தேசியவாதிகளுக்கு பாா்ட்டி கியூபெக்வா கட்சியே சரியான இடம்” என அழைப்பு விடுத்துள்ளார்.
சமீபத்திய கருத்துக்கணிப்புகளின்படி, ஆளும் CAQ கட்சியின் செல்வாக்கு கியூபெக் மக்களிடையே 13 இலிருந்து 14 சதவீதமாகச் சரிந்துள்ளது.
தற்போது லிபரல் கட்சி 32 சதவீத ஆதரவுடன் முதலிடத்திலும், பாா்ட்டி கியூபெக்வா கட்சி 29 சதவீத ஆதரவுடன் இரண்டாமிடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
