ஒன்ராறியோ மாகாணத்தின் ரெச்மண்ட் ஹில் நகரில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையம் ஒன்றில் கார் ஒன்று மோதிய விபத்தில், ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவத்தில், மேலும் ஆறு குழந்தைகள் மற்றும் மூன்று ஊழியர்களும் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து புதன்கிழமை மாலை 3 மணியளவில், யங் வீதி மற்றும் நோட்டிங்ஹாம் ட்ரைவ் சந்திப்புக்கு அருகிலுள்ள “ஃபர்ஸ்ட் ரூட்ஸ் ஏர்லி எஜுகேஷன் அகாதெமி” என்ற குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்துள்ளது.
சம்பவத்தின்போது கட்டிடத்தில் 96 குழந்தைகள் இருந்துள்ளனர்.
உயிரிழந்த குழந்தை ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய எழுபது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
