இயக்குனர் மணிரத்தினம் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான் கூட்டணி ரோஜா திரைப்படத்தில் ஆரம்பித்து தக்லைப் திரைப்படம் வரை தொடர்ந்தது.
இந்த வெற்றி கூட்டணிக்காகவே படத்தை பார்ப்போர் பலர் உள்ளனர்.
தற்போது இயக்குனர் மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் சாய்பல்லவி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்திற்கு யார் இசையமைக்க போகின்றார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சாய் அபியங்கர் இசையமைகின்றார் என்ற பொய்யான தகவல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது.
இந்த தகவல் உண்மையா பொய்யா என குழப்பத்தில் இருந்த இரசிகர்களுக்கு நடிகை சுஹாசினி பதில் அளித்துள்ளார்.
மணிரத்னத்தின் புதிய படத்திற்கு A.R.ரஹ்மான் இசையமைக்கின்றார் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
