மொண்ட்ரியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுப் போக்குவரத்துப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக வாகனப் பதிவு வரி 180 டொலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதற்கு மொண்ட்ரியலின் புறநகர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
”தங்களுக்குப் போதிய பேருந்து அல்லது இரயில் வசதிகள் இல்லாத நிலையில், மொண்ட்ரியல் நகரவாசிகளுக்கு இணையாக, தங்களையும் வரி செலுத்தச் சொல்வது அநீதி” எனக்கூறி, அவர்கள் புதிய கையெழுத்துப் போராட்டத்தைத் (Petition) தொடங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு வரை 59 டாலராக இருந்த வாகனப் பதிவு வரி, தற்போது 150 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனுடன் ஏற்கனவே நடைமுறையிலுள்ள 30 டாலர் போக்குவரத்து பங்களிப்புத் தொகையையும் சேர்த்தால், ஒவ்வொரு வாகன உரிமையாளரும் ஆண்டுக்கு 180 டாலர்களைச் செலுத்த வேண்டியுள்ளது.
மொண்ட்ரியல், லாவல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 82 நகராட்சிகளில் வசிக்கும் மக்கள் இந்த வரி உயர்வை, எதிர்நோக்கியுள்ளனர்.
