இந்தியாவில் இருந்து கனடாவிற்கு எதிரான ‘வெளிநாட்டுத் தலையீடு’ (Foreign Interference) நின்றுவிட்டதா என்ற கேள்விக்கு, பிரதமர் மார்க் கார்னி, தெளிவான பதில் அளிக்க மறுத்துள்ளார்.
இந்தியாவிற்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவுசெய்து கொண்டு, தற்போது அவுஸ்திரேலிய பயணத்தில் இருக்கும் அவரிடம் ஊடகத்தரப்பினரால், இந்த கேள்வி முன்வைக்கப் பட்டது.
பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர், “இந்தியாவின் தலையீடுகள் நின்றுவிட்டன; அதனால் தான் பிரதமர் அங்கு பயணம் மேற்கொள்கிறார்” என்று ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார்.
இது கனடாவில் வாழும் சீக்கிய சமூகத்தினர் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அந்த அதிகாரியின் கருத்தை பிரதமர் ஏற்கிறாரா என்று, செய்தியாளர்கள் பிரதமர் மார்க் கார்னியிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு பிரதமர் “தாம் அந்த வார்த்தைகளைப் பயன்படுத்தப் போவதில்லை” என்று, தெளிவற்ற முறையில் பதிலளித்துள்ளார்.
