பிரதமர் மார்க் கார்னி தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை வந்தடைந்தார்.
ஆர்க்டிக் பகுதியில் கனடாவின் கண்காணிப்பை பலப்படுத்த, அவுஸ்திரேலியாவின் நவீன ‘ரேடார்’ (Over-the-horizon radar) அமைப்பை வாங்குவது குறித்து, ஏற்கனவே இருநாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பிரதமரின் இந்த பயணத்தில், கூடுதல் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.
நவீன தொழில்நுட்பத்திற்குத் தேவையான கனிம வளங்களை (Critical Minerals) அகழ்வாராய்ச்சி செய்வதிலும், வர்த்தகத்தைப் பெருக்குவதிலும் இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனா போன்ற பெரிய நாடுகளின் ஆதிக்கத்திற்கு மத்தியில், கனடா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற “நடுத்தர வல்லரசு” (Middle Powers) நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே கார்னியின் நிலைப்பாடாகும்.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பசிபிக் நாடுகளுக்கும் கனடாவுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தவும் பிரதமர் மார்க் கார்னி திட்டமிட்டுள்ளமை, குறிப்பிடத்தக்கது.
