ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தியுள்ள வான்வழித் தாக்குதல்களுக்கு பிரதமர் மார்க் கார்னி தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
“ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மார்க் கார்னி, மும்பையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் வைத்து இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
ஈரான் அரசை “மத்திய கிழக்கின் ஸ்திரமின்மைக்கும் பயங்கரவாதத்திற்கும் முக்கியக் காரணம்” என்று வர்ணித்துள்ள பிரதமர் கார்னி, சர்வதேசப் பாதுகாப்பைக் கருதி அமெரிக்கா எடுத்துள்ள இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், ஈரான் அணு ஆயுதம் பெறுவதைத் தடுக்க இந்தத் தாக்குதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.
அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னைத் தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு முழு உரிமை உண்டு என்பதையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அரசியல் ரீதியாக ஆதரித்தாலும், கனடா இந்தத் தாக்குதலில் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
