மொன்றியல் நகர மேயர் Soraya Martinez Ferrada தனது பதவியின் முதல் 100 நாட்கள் நிறைவை முன்னிட்டு, தன்னுக்கே 10ல் 8 மதிப்பெண் வழங்கியுள்ளார்.
முதல் 100 நாட்களில் நிறைவேற்றுவதாக அறிவித்த 10 முக்கிய நடவடிக்கைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“அனைத்து 10 நடவடிக்கைகளிலும் நாங்கள் நகர்ந்துள்ளோம். நாங்கள் விரும்பிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்தோமா? ஒருவேளை இல்லை. ஆனால் 100 நாட்களில் பல செய்துள்ளோம்,” என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முன்னாள் கூட்டாட்சி அமைச்சராக இருந்த பதவியை விட்டு மேயர் தேர்தலில் போட்டியிட்ட அவர், கடந்த நவம்பர் மாதத்தில் வெற்றி பெற்றார்.
அந்த நேரத்தில் நகரம் கடுமையான சவால்களை எதிர்கொண்டது
வீட்டு வசதி நெருக்கடி,
நிதி சிக்கலில் உள்ள பொது போக்குவரத்து அமைப்பு,
மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்.
இவை புதிய பிரச்சினைகள் அல்ல. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட Valérie Plante காலத்திலும் இதே பிரச்சினைகள் முன்னுரிமையாக இருந்தன. 2025 தேர்தல் பிரச்சாரத்தில் “Listen and Act” என்ற கோஷத்துடன் மார்டினஸ் ஃபெர்ராடா களமிறங்கினார். பொதுமக்கள் கருத்துகளை கேட்டு, அதன்படி செயல்படுவோம் என்ற வாக்குறுதியே அவரது முக்கிய அரசியல் செய்தியாக இருந்தது.
100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், அவரது நிர்வாகம் எதிர்காலத்தில் எவ்வாறு செயல்படும் என்பது நகர மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
