நாட்டில் உள்ள அனைவரும் சகல மதங்களையும் சகல மதத் தலைவர்களையும் மதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
எந்த மதத்தையும் யாரும் இழிவுபடுத்த முடியாது. நாட்டில் காணப்படும் விகாரைகள் கவனிப்பாரற்று காணப்படுகின்றது.
இதே ரணசிங்க பிரேமதாச காலத்தில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்காக புத்தசாசன அமைச்சு மற்றும் நிதியத்தை உருவாக்கினார்.
பௌத்த மதம் போன்று ஏனைய மதங்களுக்கான அமைச்சுக்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு மதங்களின் கலாச்சாரங்களும் பேணப்பட்டது.
இதனால் நாட்டில் ஒற்றுமை மற்றும் இறையாண்மை ஆகியன பாதுகாக்கப்பட்டன.
தற்போது தங்களின் அரசியலுக்காக மதம், இனம், சாதி ஆகியவற்றை வைத்து விளையாடுகின்றனர்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடுவது ஒருவரின் இயலாமையை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
