நாட்டில் அரச வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை வைத்திய சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தேவையான மருந்துகள் தங்கள் கையிருப்பில் உள்ளதென சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருகையில், சில வைத்தியசாலைகளில் அடிப்படை உயிர் காக்கும் சிகிச்சைகளை வழங்குவதும் கடினம் என கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் வைத்திய சங்கக் கூட்டமைப்பின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ கருத்து தெரிவிக்கையில்,
இந்த மருந்து தட்டுப்பாடுகள் திடீரென ஏட்பட்டதால் நோயாளிகள் பெரிதளவில் பாதித்துள்ளனர்.
கண் அறுவை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பயன்படுத்தப்படும் மருந்துகள் கடுமையான தரக் கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட சில மருந்துகளில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகப்படியான ‘சுயாதீனத் துகள்கள்’ (Free particles) காணப்படுவதால் அவை அறுவை சிகிச்சைக்குப் பொருத்தமற்றவை என எச்சரித்தார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் (NMRA) தன்னிச்சையான முடிவுகள் அரச மருத்துவமனை அமைப்பில் கண் மருந்துகளின் தரத்தை பாதிக்கலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
