ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச பிரித்தானியா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் விரிவுரை நிகழ்த்தவிருந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் தமிழ் இளைஞர் அமைப்பு உள்ளிட்ட புலம்பெயர் அமைப்புகள் அவரது வருகைக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டங்களை முன்னெடுத்தன. இதன் காரணமாக குறித்த விரிவுரை ரத்து செய்யப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் ஆட்சிபீடம் ஏறிருக்கும் அநுர அரசாங்கத்தின் கொள்கைகளும், தமிழீழ விடுதலை புலிகளின் கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று பொருந்த கூடியவை என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் இலங்கை ராணுவம் ஊடாக தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச ரீதியில் பார்க்கும் போது ஒரு சில நாடுகளில் அந்த கொள்கைகள் காணப்படுகின்றன.
குறிப்பாக பிரித்தானியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் மக்களால் தமிழீழ கொள்கைகள் செயற்பட்டு வருகின்றன.
