இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது, கணேமுல்ல சஞ்சீவ கொலை குறித்த பல முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாட்டொன்றுக்கு செல்வது தான் தனது வாழ்நாள் கனவு எனவும் அந்த கனவை நனவாக்குவதாக கெஹெல்பத்தர பத்மே கூறியதன் காரணமாகவே தான் கொலை சம்பவத்திற்கு உதவியாகச் செயல்பட்டதாகவும் குறித்த சம்பவத்திற்கா தான் பணம் ,பெற்றுக்கொள்ள வில்லையெனவும் இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
இஷாராவுடன் கைதுசெய்யப்பட்ட ஜே.கே. பாய் என்ற நபருக்கு ரூபா 6.5 இலட்சம் வழங்கி, போலி பயண ஆவணங்கள் தயாரித்து ஐரோப்பிய நாட்டுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்திருந்ததாகவும் இஷாரா செவ்வந்தி, ஐரோப்பிய நாட்டுக்கு செல்லும் கனவை அடிக்கடி பத்மேவிடம் பகிர்ந்ததாகவும், பத்மே தனது போதைப்பொருள் விற்பனைச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது இஷாரா செவ்வந்தியையும் பயன்படுத்தி வந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
