தம்பளர் ரிட்ஜ் (Tumbler Ridge) பகுதியில் கடந்த மாதம் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, ஒரு சுதந்திரமான மத்திய அரசு விசாரணைக்கு (Independent Federal Inquiry) கன்சர்வேடிவ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய துயரங்களைத் தவிர்க்கவும் இந்த விசாரணை அவசியம் என அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிராங்க் கப்புடோ மற்றும் பாப் ஜிம்மர் ஆகியோர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த விசாரணை சில முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர்.
செயற்கை நுண்ணறிவின் பங்கு, ஆயுதங்கள் மற்றும் மனநலம் முதலான அம்சங்களில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென, கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.
