கடந்த ஆண்டில் மொன்றியல் நகரின் மெட்ரோ இரயில் போக்குவரத்து வலையமைப்பில் வன்முறைத் தாக்குதல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக மொன்றியல் காவல்துறை (SPVM) தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டை விட 15 சதவீத உயர்வுடன், மொத்தம் 726 தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது கடந்த ஆறு ஆண்டுகளில் பதிவான தாக்குதல் சம்பவங்களை விடவும் மிக அதிகமான எண்ணிக்கையாகும்.
கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட புதிய தரவுகளின்படி, 2024-ஆம் ஆண்டில் 631 ஆக இருந்த தாக்குதல் சம்பவங்கள், 2025-ஆம் ஆண்டில் 726 ஆக உயர்ந்துள்ளன.
குறிப்பாக 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் இத்தகைய வன்முறைகள் மிக அதிகமாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
