மொண்ட்ரியல் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் பால் (Saint-Paul) தேவாலயத்தில் இடம்பெற்ற தீ விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதிகாலை 1:30 மணியளவில் தொடங்கிய இந்தத் தீ, குறுகிய காலப்பகுதியில் தேவாலயம் முழுவதும் பரவியது.
100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடியும், தேவாலயத்தின் கோபுரம் இடிந்து விழுவதைத் தடுக்க முடியவில்லை.
இந்த பாரிய தீ விபத்தில், அந்தப் பழமையான கட்டிடம் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது.
1910-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தேவாலயம், மாண்ட்ரியல் நகரின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தேவாலயத்தின் கீழ் தளத்தில் 2013 ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்த “லா மெயின் கி பார்டேஜ்” (La Main Qui Partage) என்ற உணவு வங்கியும் இந்த தீவிபத்தில், முற்றிலும் அழிந்துள்ளது.
இந்தத் தீ அருகில் இருந்த முதியோர் இல்லத்திற்கும் பரவியதால், அங்கிருந்த சுமார் 73 முதியவர்கள் உள்ளிட்ட 148 பேர் நள்ளிரவில் அவசரமாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
