மொண்ட்ரியல் நகரத்தில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையத்திற்கு (Hair Salon), நீதிமன்றம் சுமார் 7,000 டொலர்கள் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. வாடிக்கையாளர் ஒருவரை ஆண் அல்லது பெண் என, ஏதாவது ஒரு பாலின அடையாளத்தைத் தேர்வு செய்யுமாறு கட்டாயப் படுத்தியமைக்காகவே, இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, தன்னை ’ஆண் அல்லது பெண் என எந்தவொரு குறிப்பிட்ட பாலின அடையாளத்திற்குள்ளும் அடங்காதவர்’ என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் நபர் ஒருவர், இந்த சிகையலங்கார நிலையத்தில் முடிதிருத்துவதற்காக முன்பதிவு செய்ய முயன்றார்.
அந்த நிலையத்தின் இணையதளத்தில் ஆண்களுக்கான முடி திருத்தம் அல்லதுபெண்களுக்கான முடி திருத்தம்என்ற இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. பாதிக்கப்பட்ட நபர் சிகையலங்கார நிலையத்தைத் தொடர்பு கொண்டு, தான் இந்த இரண்டு பிரிவிலும் வரமாட்டேன் என்று விளக்கியபோதும், அந்த நிலையம் அவருக்குச் சேவை வழங்க மறுத்துவிட்டது.
இது குறித்து கியூபெக் மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஒருவரின் பாலினத்தை வைத்து சேவையைத் தீர்மானிப்பது மனித உரிமை மீறல் என்று சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.
