மொன்ட்ரியல் மாநகர சபையின் பட்ஜெட் கூட்டத்தைப் பாதியிலேயே நிறுத்தும்படி, நூற்றுக்கணக்கான மாநகரத் தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் நேற்று மாநகர சபைக்குள் புகுந்து அதிரடிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேயர் சொரயா மார்டினெஸ் பெர்ராடா தலைமையிலான புதிய நிர்வாகத்தின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருந்த நிலையில் இந்தப் போராட்டம் வெடித்தது.
தூய்மை மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள் பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கட்டிடத்திற்குள் நுழைந்தனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், சபையின் நடவடிக்கைகள் சுமார் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
பல்வேறுபட்ட கோஷங்களை எழுப்பிய அந்தப் பணியாளர்கள், மாநகர நிர்வாகம் முன்வைத்துள்ள புதிய நிதித் திட்டங்களுக்குத் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.
