மியன்மாரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இராணுவத்தின் ஆதரவு பெற்ற ‘யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மெண்ட் கட்சி’ பெருவாரியான வெற்றி பெற்றதாக திங்கட்கிழமை இன்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு மாற்றாக யு.எஸ்.டி.பி தலைமையிலான புதிய அரசு அமையவிருக்கிறது.
யு.எஸ்.டி. கட்சி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, மியன்மார் பாராளுமன்ற கீழவையில் மொத்தமுள்ள 61 இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 57 இடங்களை யு.எஸ்.டி.பி. கைப்பற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மொத்தம் 290 இடங்களில் யு.எஸ்.டி.பி வென்றிருப்பதாக வாக்கு எண்ணிக்கை நிலவரம் மூலம் அறிய முடிகிறது.
மியன்மாரில் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட 166 இடங்களையும் சேர்த்து யு.எஸ்.டி.பி வெற்றி பெற்ற இடங்களையும் கணக்கிட்டால் பெரும்பான்மைக்கு தேவையான 294 இடங்களுக்கும் மேல் அதாவது, 450 இடங்களை யு.எஸ்.டி.பி. கைப்பற்றியிருப்பதால் மியன்மாரில் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.