பாரிஸில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மார்க் கார்னி அங்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்த சர்வதேச உச்சிமாநாடானது, உக்ரைன் நாட்டின் எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
ரஷ்யாவுடனான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, உக்ரைன் மீண்டும் தாக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும் “பாதுகாப்பு உறுதிமொழிகளை” (Security Guarantees) இறுதி செய்வதே இந்தநிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
சுமார் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டைப் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முன்னின்று நடத்துகிறார்.
உக்ரைனுக்கு நேட்டோ (NATO) உறுப்புரிமை இல்லாமலேயே, அதற்கு இணையான இராணுவப் பாதுகாப்பை வழங்க இந்த நாடுகள் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
