கியூபெக் மாகாணத்தில் பில்லியன் டொலர்கள் மதிப்பிலான முக்கியத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்தும் நோக்கில், மாகாண அரசு புதிய சட்ட மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது.
தேசிய நலன் சார்ந்ததாகக் கருதப்படும் இந்த பெரிய திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுவதற்காக, கிட்டத்தட்ட 30 சட்டங்களை திருத்தம் செய்வதற்கு அல்லது அதன் நடைமுறையைத் தளர்த்துவதற்கு இந்த புதிய சட்டம் ஆனது, கியூபெக் அரசாங்கத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது.
வேலைவாய்ப்பை உருவாக்கவும், பொருளாதார நிச்சயமற்ற தன்மையைக் குறைக்கவும் இந்த நடவடிக்கை மிக அவசியம் என, கியூபெக் அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த கியூபெக் முதல்வர் ஃபிரான்சுவா லெகால்ட் (François Legault), “உலகப் பொருளாதாரத்தில் நிலவும் சவால்களும், அமெரிக்காவின் கொள்கை மாற்றங்களால் உருவாகும் பொருளாதார ஸ்திரமற்ற நிலையுமே, இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
