ஒன்ராறியோ மாகாணத்தின் சர்ச்சைக்குரிய திறன் மேம்பாட்டு நிதி (Skills Development Fund – SDF) மூலம் மில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்ற ஒரு தனியார் நிறுவனம் மீது, ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை உத்தியோகபூர்வமாக விசாரணையைத் தொடங்கியுள்ளது.
அரசாங்கம் நடத்திய விரிவான தடயவியல் கணக்காய்வில் (Forensic Audit) அந்த நிறுவனத்தின் கொடுப்பனவுகளில் “சீரற்ற தன்மைகள்” (Irregularities) கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை, மனநல சுகாதார தளத்தை வழங்கும் கீல் டிஜிட்டல் சொல்யூஷன்ஸ் (Keel Digital Solutions) என்ற நிறுவனத்தை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனமானது தொழிலாளர், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சு மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான அமைச்சு ஆகிய இரண்டிலிருந்தும் மானியங்களைப் பெற்றுள்ளது.
தற்போது முழுமையான குற்றவியல் விசாரணைக்காக இந்த வழக்கு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
