கனடாவின் மனிட்டோபா மாகாணம் முழுவதும் 29க்கும் மேற்பட்ட காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில், 10 தீவிபத்துகளில் நெருப்பு கட்டுக்கடங்காமல் எரியத் தொடங்கியுள்ளதால், நிலைமை தீவிரமடைந்துள்ளது.
இதனால், 21,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், 27 சமூகங்களுக்கு கட்டாய வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த பெரும் பேரழிவில் இருந்து மனிடோபாவை காப்பாற்ற, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் மற்றும் நிபுணர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.
ஹெலிகாப்டர் விமானிகள், கனரக இயந்திரங்களை இயக்கும் ஓட்டுநர்கள், மற்றும் ரயில்வே ஊழியர்கள் என பலதரப்பட்ட தொழில்சார் விற்பன்னர்களும் தீயணைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தீயணைப்பு பணியில் அமெரிக்காவின் கொலம்பியா ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானிகளும் இணைந்துள்ளனர்.
ராப் ப்ரூங்கன் என்ற ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை விமானி, மானிட்டோபாவிற்கு அவசர விமான ஆதரவும், மனிதவளமும் தேவை என்ற செய்தி கேட்டு தனது குழுவினருடன் மே 30 அன்று ”த பாஸ்” விமான நிலையத்தை வந்தடைந்தார்.
நான்கு விமானிகள், எட்டு இயந்திரவியல் விற்பன்னர்கள் ஆகியோர் 1,200 கேலன் நீர் பக்கெட்டுகளுடன் கூடிய இரண்டு ஹெலிகாப்டர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
