கனடாவின் மத்திய அரசு, கியூபெக் மாகாணத்திற்கு வெளியே குடியேறும் பிரெஞ்சு மொழி பேசும் பிராங்கோஃபோன் மக்களுக்குச் சிறப்புச் சலுகை அளித்து, அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிப்பது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது, நாட்டின் பிரெஞ்சு மொழி பேசும் சிறுபான்மை சமூகங்களைக் காப்பாற்றுவதற்கும், இருமொழிக் கொள்கையை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
பிரதமர் மார்க் கார்னி, கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது, கியூபெக்கிற்கு வெளியே குடியேறும் பிரெஞ்சு மொழி பேசும் மக்களின் இலக்கை 2029-ஆம் ஆண்டுக்குள் 12% ஆக உயர்த்துவதாக உறுதியளித்திருந்தார்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்த இலக்கு 2%-க்கும் குறைவாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
