பருத்தித்துறை கொட்டடி கடற் தொழிலாளர் கூட்டுறவுச்சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட பேரணி, கொட்டடி மீன் சந்தைக்கு அருகாமையில் இருந்து ஆரம்பமாகி கடற்கரை வீதி வழியாக சென்று பருத்தித்துறை நகர சபையை சென்றடைந்தது.
பேரணியில் கலந்து கொண்டோர் அகற்று அகற்று மண்ணை அகற்று, பருத்தித்துறை நகர சபையே மண்ணை அகற்று ஆகிய கோஷங்களை எழுப்பியவாறு நகர சபை வாசலை சென்றடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் சம்பவ இடத்திறகு வருகை தந்திருந்தனர்.
பரீட்சை நிலையம் அருகில் இருப்பதன் காரணமாக அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துமாறு பொலிசார் போராட்டக்காரர்களை வேண்டிக் கொண்டனர். இதனை அடுத்து போராட்டக்காரர் அமைதியாகினர்.
போராட்டத்தை தொடர்ந்து மண்ணை அகற்றுமாறு கோரி பருத்தித்துறை நகர பிதாவிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடலோர பாதுகாப்புத் திணைக் களத்தின் அதிகாரிகளை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை நகர சபைக்கு அழைப்பதாகவும் இதன் போது கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை வந்து கலந்துரையாடி அதில் எடுக்கப்பட முடிவுக்காக மணலினை அகற்ற முடியும் எனவும் நகரபிதா தெரிவித்தார்.
