ஒன்ராறியோ – செயிண்ட் கிளேர் கல்லூரியின் (St. Clair College) பேருந்து அட்டைத் திட்டத்தில் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட மாணவர்கள், வருடாந்திர கட்டணம் ஆனது 300 டொலரிலிருந்து இலிருந்து 800 டொலரைத் தாண்டி உயர்ந்தமை குறித்து, அதிருப்தி அடைந்துள்ளனர்.
கல்லூரியின் “சைன்ட்ஸ் பாஸ்” (Saints Pass) எனப்படும் இந்த பேருந்து அட்டையைப் பயன்படுத்தாத பல மாணவர்கள், குறிப்பாக வளாகத்திற்கு அருகில் வசிக்கும் சர்வதேச மாணவர்கள், இந்த அதிக கட்டணத்தைச் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அதிகரித்துள்ள கட்டணச் சுமையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், இந்தத் திட்டத்தில் இருந்து விலக்குக் கோரி விண்ணப்பித்தபோதும், அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம், விலக்குக் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 40% அதிகபட்ச வரம்பைத் தாண்டியதால் கொள்கைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக மாணவர் பிரதிநிதிகள் சபையின் தலைவர் பிரதம் சிங் பெனிபால் (Pratham Singh Benipal) தெரிவித்தார்.
முன்னர் நிலவிய “சலுகைத் தளர்வு” இந்த வருடம் வழங்கப்படவில்லை என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
