ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட்டின் அரசாங்கம், விவாதத்தை கடுமையாகக் குறைப்பதன் மூலம், மூன்று முக்கிய சட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதை விரைவுபடுத்த முயற்சிப்பதாகக் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.
வீட்டுவசதி, கல்வி மற்றும் எரிசக்தித் துறையில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த மசோதாக்கள் மீது, பொதுமக்களின் ஆய்வு மற்றும் பங்களிப்பைத் தவிர்ப்பதாகப் கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கம் மீது எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரசாங்க சபை தலைவர் ஸ்டீவ் கிளார்க் ஒன்டாரியோ சட்டசபையில் முன்மொழிந்த இந்த நகர்வு நடவடிக்கையானது, புதிய வீட்டுவசதி மசோதா மற்றும் கல்வி மசோதா ஆகிய இரண்டு முக்கிய மசோதாக்களுக்கான குழு நிலை விவாதத்தை (Committee stage) புறக்கணிக்கக் கோருகிறது.
குழு நிலை விவாதச் செயற்பாடானது, குடிமக்கள், வல்லுநர்கள் மற்றும் வழக்கறிஞர் குழுக்கள் ஆகியோர், சட்டம் இயற்றுபவர்களுடன் நேரடியாகப் பேசவும், திருத்தங்களை முன்மொழியவும் அனுமதிக்கப்படும் முக்கிய நடவடிக்கை ஆகும்.
இந்த குழு நிலை விவாதத்தை தவிர்க்குமாறு ஒன்டாரியோவின் கன்சர்வேட்டிவ் கட்சி அரசாங்கம் கோருகின்றமை, விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
