நுரைச்சோலை கடற்கரையில் உள்ள ஒரு மீன்பிடி முகாமில் எட்டு மீனவர்கள் மீன்களை உலர்த்திக் கொண்டிருந்தபோது, கடலில் மிதந்து வந்த போத்தலை கண்டெடுத்துள்ளனர்.
அதை எடுத்த இளைஞன், மற்ற மூவருடன் சேர்ந்து போத்தலில் இருப்பது மதுபானம் என தவறாக நினைத்து குடித்துள்ளனர்.
இந்தப் பொருளை உட்கொண்ட ஒரு இளைஞன் கடுமையாக நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார்.
நேற்று காலை மீன்பிடி முகாமின் உரிமையாளர் அங்கு வந்தபோது, மற்றொரு மீனவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதற்கிடையில், இந்த திரவத்தை பருகிய மற்ற இருவரும் பின்னர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இருவரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
