வவுனியா பிரதேச செயலகத்தில் பொங்கல் விழாவானது பிரதேச செயலக வளாகத்தில் இன்றையதினம் சிறப்பான முறையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள ஒன்பது கிளைகளிற்கு இடையில் பொங்கல் விழாவை முன்னிட்டு போட்டி நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றிருந்ததுடன், தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் முகமான நடனங்களும் இடம்பெற்றிருந்தது.
மேலும் ஒவ்வொரு கிளையினராலும் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்திருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருந்தது.
வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் சரத் சந்திர பிரதம விருந்தினராக கலந்து கொண்டதும், தமிழ்மணி அகளங்கன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.