மொன்றியலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ள கான்ட்ர்கூயர் நகரில், மொன்றியல் துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி குடியிருப்பாளர்கள் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் 1.5 மில்லியன் கொள்கலன்களை (containers) கையாளும் திறனை அதிகரிக்கும் நோக்கில் மொன்றியல் துறைமுகத்தில் புதிய சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படுகின்றது.
இது தேவையில்லாதது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பது மற்றும் பொது சுகாதாரத்தை பாதிப்பது என்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எதிர்ப்புகள் இருந்தபோதிலும், மொன்றியல் துறைமுக ஆணையம் (Montreal Port Authority – MPA) திட்டத்தின் ஆரம்ப கட்டப் பணிகளைத் தொடரப்போவதாக உறுதி செய்துள்ளது.
எதிர்கால சரக்கு போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மொன்றியல் துறைமுகத்தின் பொருளாதார முக்கியத்துவத்தை வலுப்படுத்தவும் இந்த விரிவாக்கம் அவசியம் என்று மொன்றியல் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
