ஐ.சி.சி. யின் புதிய தலைவராகப் ஜெய் ஷா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனுமாவார்.
ஜெய் ஷா 2019 யில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராக செயட்பட்டதோடு 2021 ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
இதற்கு முன் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளேன் இருந்த போதிலும், இவருடைய பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் , ஐசிசி தலைவராக ஜெய் ஷா இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.