இந்தியாவின் வாரணாசி பகுதியில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன. குறித்த தீ விபத்து வாரணாசி தொடருந்து நிலையத்திற்க்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்டுள்ளதுடன் தீ விபத்தில் 200 வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.
வாரணாசியின் கான்ட் தொடருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடத்தில் இன்று [30] அதிகாலை இந்த தீ விபத்து நேர்ந்துள்ளது.
தீயை அணைக்கும் பணியில் 12 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினரும், காவல்துறை அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
இத் தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தின் முதற்கட்ட விசாரணையில் மின்னொழுக்கு காரணமாக விபத்து சம்பவித்துள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது.
தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், தொடருந்து நிலையத்தின் ஏனைய பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டு பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.