கியூபெக்கில் உள்ள நீச்சல் குளங்களின் உரிமையாளர்கள், வெளிப்புற நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளுடன் கூடிய வேலியை அமைக்க வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 30 ஆம் திகதிக்குள் குறித்த வேலி அமைக்கப்பட வேண்டும் என்று முன்னர் விதிக்கப்பட்ட காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு வருட காலத்துக்குள், வெளிப்புற நீச்சல் குளங்களுக்கு பாதுகாப்பு விதிமுறைகளுடன் கூடிய வேலிகள் அமைக்கப்பட வேண்டும்.
புதிய நகராட்சி விவகாரத்துறை அமைச்சர் ஜெனிவீவ் கில்போல்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, மொன்றியல் குழந்தைகள் மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஹுசைன் விஸ்ஸான்ஜி, இந்த வேலி அமைப்பதற்கான காலக்கெடுவை நீடித்தமையானது உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
