டொராண்டோ நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்கு அருகே சிறு விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
ஆனால், விமானத்தில் இருந்த மூன்று பேரும் எந்த காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
டொராண்டோ தீயணைப்புத் துறைத் தலைவர் ஜிம் ஜெஸ்ஸப் கூறுகையில், ஹான்சன் தெரு மற்றும் காக்ஸ்வெல் அவென்யூ சந்திப்புக்கு அருகிலுள்ள மோனார்க் பார்க் கொலீஜியேட் இன்ஸ்டிடியூட் (Monarch Park Collegiate Institute) அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இரவு 8:15 மணியளவில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படையினர், விமானம் கால்பந்து மைதானத்திற்கு அருகில் இருந்த ஒரு வேலி மீது மோதி, வாகனத்தரிப்புப் பகுதியில் விழுந்து கிடப்பதை, கண்டறிந்தனர்.
விமானத்தில் இருந்த 30 முதல் 40 வயதுக்குட்பட்ட மூன்று பேரும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு எந்த காயமும் இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
