மொன்றியல் பொதுப் போக்குவரத்து நிறுவனமான எஸ்.டி.எம்-இன் (STM) மெட்ரோ மற்றும் பேருந்து சேவைகள், பராமரிப்பு ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வரும் நாட்களில் பெரிதும் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 22-ஆம் திகதி முதல் அக்டோபர் 5-ஆம் திகதி வரை, வாரத்தில் மூன்று நாட்கள் இந்த வேலைநிறுத்தம் மொன்றியல் நகரத்தில் நடைபெறும்.
திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில், அதிகாலை மற்றும் மாலை நேர மற்றும் இரவு நேர சேவைகள் மட்டுமே கிடைக்கும் என கியூபெக் தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு முதலான நாட்களில், வழக்கமான அட்டவணையின்படி போக்குவரத்து சேவைகள் தொடரும்.
மொன்றியல் நகரத்தில் வேலைநிறுத்த நாட்களில், மெட்ரோ ரயில்கள் காலை 6:30 முதல் 9:30 வரையும், பிற்பகல் 2:45 முதல் 5:45 வரையும், மற்றும் இரவு 11:00 முதல் சேவைகள் முடியும் வரையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
