கனடாவிலிருந்து வரும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியால் அமெரிக்க விவசாயிகள் தங்களது பண்ணைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
அமெரிக்காவால் கனடிய உற்பத்திகளுக்கு விதிக்கப்பட்ட இந்த வரிகள், ஏற்கனவே கடினமான காலங்களைச் சமாளித்து வரும் அமெரிக்க விவசாயிகள் வாழ்க்கை நடத்துவதை மேலும் கடினமாக்குகின்றன, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா பகுதியில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான உரங்கள் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரிவிதிப்பு அமுலாக்கத்தின் பின்னர், தற்போது கனடிய உரங்களுக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக, தெற்கு டகோட்டா விவசாயிகள் சங்கத்தின் தலைவர் டக் சோம்ப்கே தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் விதிக்கப்பட்டும் இந்த வரிகள் அவரது அமெரிக்க மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கே “பேரழிவை” ஏற்படுத்துகின்றன என, அமெரிக்க ஜனாதிபதியின் புதிய வரிவிதிப்புக் கொள்கையை அவர் விமர்சித்துள்ளார்.
மேலும் கனடாவிலிருந்து அனுப்பப்படும் பண்ணை உபகரணங்கள் மீதும் உருக்கு மீதான 25 சதவீத வரி தாக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாக கனேடிய பண்ணை உபகரணங்கள், அமெரிக்காவில் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன என்பது சுட்டிக்காட்டத் தக்கது.


