கடந்த மாதம் மொண்ட்ரீலில் நடைபெற்ற ‘ÎleSoniq’ இசை விழாவின்போது ஊசிகள் மூலம் போதை ஏற்றப்பட்டதாக வந்த புகார்கள் தொடர்பாக, ஒட்டாவாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் 33 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணையில், ஆகஸ்ட் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடந்த இசை விழாவில் ஆறு பேருக்கு ஊசி மூலம் போதை மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது போன்ற ஊசி தாக்குதல் சம்பவங்கள் கியூபெக் மாகாணத்தில் இந்த கோடை காலத்தில் பலமுறை நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
