மாத்தளை, கோஹோலன்வல பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் சட்டவிரோதமாக நுழைந்து தேங்காய்களை திருடிக்கொண்டிருந்த ஒருவரை தோப்பின் பராமரிப்பாளர் துப்பாக்கியால் சுட்டதில் குறித்த நபர் காயமடைந்து மாத்தளை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை காயமடைந்த நபரும் மற்றொரு நபரும் சேர்ந்து சுமார் 20 ஏக்கர் பரப்பளவான தென்னந்தோப்பில் தேங்காய்களை திருடச் சென்றுள்ளனர்.
இதன்போது தோப்பின் பராமரிப்பாளர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் சுமார் ஐநூறு மீட்டர் தூரம் ஓடி, கோஹோலன்வல பிரதான வீதிக்கருகில் வைத்து கீழே விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட அப் பிரதேச மக்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
காயமடைந்த நபர் மீது பல தடவைகள் தேங்காய்களை திருடிய சம்பவம் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக மகாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவருடன் வந்த மற்றொரு நபரை கைது செய்ய மகாவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
