Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

ரணிலுக்காக ஒன்றுகூடும் முன்னாள் ஜனாதிபதிகள்!

ஆகஸ்ட் 23, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தற்போது சிறையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சார்பாக ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் நாளை கொழும்பில் விசேட ஊடக சந்திப்பை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்த ஊடக சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

கொழும்பில் உள்ள ப்ளவர் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல, நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, மனோ கணேசன், பி.திகாம்பரம், ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் ருவான் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சகல ரத்நாயக்க, சுகீஸ்வர பண்டார மற்றும் பல எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் இதை ஆதரிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாளை நடைபெறும் ஊடக சந்திப்பில் அவர்கள் கலந்து கொள்ளப் போவதில்லை என்றாலும், முன்னாள் ஜனாதிபதிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகவும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய செய்தி ரணிலை சந்தித்த சஜித் ஊடகங்களுக்கு கருது தெரிவிப்பு!
அடுத்த செய்தி இன்று மற்றும் நாளை பல ரயில் பயணங்கள் ரத்து!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

சுற்றுலா பயணிகளின் வருகையில் மாற்றம்!

மே 31, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்

ஏப்ரல் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மக்கள் ஆணைக்கு எதிராக யாராவது செயற்படுவார்களாயின் அந்த முயற்சி முறியடிக்கப்படும் – ஜனாதிபதி

மே 15, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அதிகரித்த வெப்ப நிலை – ஹீட் ஸ்ரோக் ஏற்பட வாய்ப்பு

மார்ச் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?