வெந்தயம். – 250gm
ஓமம் – 100
கருஞ்சீரகம் – 50gm
மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதைத் தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாகக் கலந்து ஒரு கண்ணாடிக் குவளையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு தேக்கரண்டி அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் அருந்த வேண்டும்.
இவ்வாறு அருந்துவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சுக் கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படும்.
இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தும்.
இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கி, இருதயம் சீராக இயங்கும்.
சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.
உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் ஏற்படும். எலும்புகள் உறுதியடைந்து எலும்புத் தேய்மானம் நீங்கும். பற்கள் வலுவடையும். கண் பார்வை தெளிவடையும்
மேற்குறிப்பிட்டுள்ள இந்தக் கலவையை 2 அல்லது 3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டுவரும் பொழுது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் விரைவில் குணமடையும்