கடலோர ரயில்வேயில் நடைபெறவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று மற்றும் நாளை பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தோடன்டுவ மற்றும் புஸ்ஸ இடையே பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே பொது மேலாளர் ரவீந்திர பத்மபிரிய அறிவித்துள்ளார்.
அதன்படி நாளை ரத்து செய்யப்படும் ரயில்களாவன,
காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.15 இற்கு கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 8319
மருதானை ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 இற்கு காலிக்கு புறப்படும் ரயில் எண் 8788.
நாளை தொடக்க நேரங்கள் மாற்றப்பட்டுள்ள ரயில்கள்
காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 5.00 மணிக்கு கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 8327 சமுத்திராதேவி, காலை 6.30 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 1 மணித்தியாலம் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்கும்.
காலி ரயில் நிலையத்திலிருந்து காலை 4.10 இற்கு கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ள ரயில் எண் 8320, காலை 8.50 மணிக்கு காலி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
மேலும் இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து காலி நோக்கி புறப்படும் இரவு ரயில் ஹிக்கடுவ ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.


