பாப்பரசர் போப் பிரான்சிஸ் அவர்களிற்கு வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபையின் பரிசுத்த பாப்பரசர் போப் பிரான்சிஸ் வத்திகானில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் அஞ்சலி நிகழ்கள் இடம்பெற்று வருகிறது. அந்தவகையில் வவுனியா தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
அவர்கள் தொடர்போராட்டம் மேற்கொண்டுவரும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள கொட்டகையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது அன்னாரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
பாப்பரசரின் மறைவையொட்டி துயரடைந்திருக்கும் உலக கிறிஸ்தவ மக்களின் துயரத்தில் நாங்களும் கலந்துகொள்கின்றோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.