அண்மையில் பலர் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏட்படுத்திய சம்பவம் தான் பஹல்காம் தாக்குதல். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்த்ததுடன் , இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் முறுகல்நிலையை ஏட்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் குற்றவாளிகளை இந்தியா தேடி வருகின்றது. இதன்படி இந்த தாக்குதலோடு தொடர்புடைய தீவிரவாதி ஹாசிம் மூஸா பற்றிய விசாரணையில் இவர் பாகிஸ்தான் இராணுவத்தின் முன்னாள் தளபதி என தெரியவந்துள்ளது.
மேலும் தீவிரவாதி ஹாசிம் மூஸா இராணுவத்தின் சிறப்புப் பிரிவான எஸ்.எஸ்.ஜி.-ஐ சேர்ந்தவர் என்பதுடன் தடைசெய்யப்பட்ட லஷ்கர் – ஏ – தொய்பாவில் பின்னர் இணைந்துள்ளார் என விசாரணை மூலம் அறியமுடிகின்றது.
இவ்வாறான சதித்திட்டங்களுக்கு பாகிஸ்தான் இராணுவம் அனுமதி வழங்கியிருக்கும் என்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மூஸா குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.