வவுனியா கனகராயன்குளம் விஞ்ஞானகுளம் பிரதானபாதையில் இன்று இரவு ஆறு முப்பது மணியளவில் யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கனகராயன்குளத்தில் உள்ள கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு விஞ்ஞான குளத்தில் உள்ள தனது வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த தே.நிஷாந்தன் என்ற 32 வயது இளைஞனே கனகராயன்குளம் பாலத்துக்கு அருகில் பிரதான வீதியில் வைத்து யானையின் தாக்குதலுக்கு உள்ளானார்.
இதன் போது தலையில் காயம் அடைந்த அவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை நேற்றைய தினமும் குறித்த பகுதியில் வயோதிபர் ஒருவர் குறித்த வீதியால் சென்றபோது யானை தாக்கி படுகாயம் அடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
