சிலாபம் வெல்ல பகுதியிலிருந்து 40 மற்றும் 44 வயதான இரு மீனவர்கள் கடலுக்குச் சென்று காணாமல்போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடலுக்கு சென்ற இரு மீனவர்களுடைய படகுகளும் கடலில் மிதப்பதைக் கண்ட மற்றுமொரு மீன்பிடி படகிலுள்ள மீனவர்கள் இது தொடர்பில் கடற்படை மற்றும் மீன்பிடித் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
