இளைஞர்கள் ஒற்றுமையாக முன்னோக்கி பயணிக்கின்றனர் என்பதை வலியுறுத்தி வவுனியாவில் விழிப்புணர்வு நடை பவனி இன்று இடம்பெற்றிருந்தது.
குறித்த நடைபவனியானது வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் ஆரம்பமாகி கண்டி வீதியின் ஊடாக வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றிருந்தது.
வவுனியா இளைஞர் சேவைகள் சம்மேளனம் குறித்த நடை பவனியினை ஏற்பாடு செய்திருந்தனர்.
பெருமளவு இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் காப்போம் இயற்கையையும் எதிர்காலத்தையும், இளைஞர் கழகம் ஒற்றுமையுடன் முன்னோக்கி, போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறு இவ் நடை பவனியில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது மாகாண இளைஞர்சேவைகள் பணிப்பாளர், வவுனியா மாவட்ட பணிப்பாளர் உட்பட இளைஞர்சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், சம்மேளன தலைவர் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
