ஒன்டாரியோ மாகாணத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் தொடர்ந்து நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட வெப்ப அலைகள் காரணமாக, விவசாயிகள் தங்கள் பயிர்களைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர்.
ஜூலை மாதத்தில், இப்பகுதியில் வழக்கமாகப் பெய்யும் மழையளவில் சரிபாதி (50%) மட்டுமே பதிவாகியுள்ளது என கனடாவின் சுற்றுச்சூழல் துறை (Environment Canada) தெரிவித்துள்ளது.
இது கடந்த 20 ஆண்டுகளின் சராசரி மழை அளவோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.
மழை இல்லாததால், இதனால், உள்ளூர் விவசாயிகள் கடும் இழப்பைச் சந்தித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
கனடாவின் விவசாயத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கிழக்கு ஒன்டாரியோவின் சில பகுதிகள் தற்போது “அசாதாரணமான வறண்ட” நிலையை எதிர்கொண்டுள்ளன.
இதேவேளை, தற்போதுள்ள குறைந்த நீர் மட்டம் காரணமாக, பொதுமக்கள் தண்ணீரைப் பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும் என்று, சில நகரசபைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
